சி.ஏ.ஏ., விவகாரத்தில் மூக்கை நுழைத்த ஈரானுக்கு இந்தியா உதவி

புதுடில்லி: கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. ஈரானில் இதுவரை, 13,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 724 உயிரிழந்துள்ளனர்.


ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஈரான், வைரஸ் பாதிப்பை சமாளிக்க முடியாமலும், மக்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமலும் திணறி வருகிறது. அதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கேட்டுள்ளது.



ஈரானில், 4,000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஈரானிலிருந்து நான்கு கட்டமாக இதுவரை 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.